திங்கள், 22 பிப்ரவரி, 2016

அழகனுக்கு ஒரு 'ழ 'கர மாலை

மனம் குழைய அழைத்தால் நீ குழந்தையாய் வருவாயா ?
தமிழில் பாடி உனை அழைத்தால் தவழ்ந்திங்கு வருவாயா?
தளர்நடை நடந்துவந்தென்  மடியினில் அமர்ந்து கொண்டு
மழலையில் மிழற்றும் உனை தழுவிமனம் மகிழ்வேனோ?

ஈரேழு உலகமதை உன்கருவில் உருவாக்கி  ஓயாது ஒழியாது காக்கும் உன் புகழ்பாடி
பெரியோனாய் உனை எட்டத்தில் வைத்து விட்டால்
எளியவனாய் சிறுவனாய் என்னருகில் வருவாயா?
எழில்பொங்க குழலூதி மனம் கொள்ளை கொள்வாயா?

ஆழ்மனக் காதலுடன் ஆழிமழைக் கண்ணனை
குழவி ஆக்கிக் களிப்பெய்தி பண்ணிசைத்துப் பாராட்டி
நீராட்டி  அமுதூட்டி  தாலாட்டிப் பரிவு செய்த
பெரியாழ்வார் பெற்ற இன்பம்  சிறியேன் நான் அடைவேனோ?